Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாஃபா பாண்டியராஜனை கண்டித்து அதிமுக தொண்டர்கள் கண்டனம்

ஜனவரி 25, 2021 12:25

சென்னை : தமிழக  அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனை கண்டித்து அதிமுக தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவும்  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக உள்ள மாஃபா.பாண்டியராஜன் ஆவடி தொகுதியில் அதிமுகவினருக்கு பதவி வழங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. 

பணம் பெற்றுக் கொண்டு அதிமுகவில் பொறுப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.குறிப்பாக ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் அமைச்சர் உதவியாளரை நியமித்து வசூல் வேட்டை  நடத்துவதாக கூறி 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அமைச்சர் பாண்டியராஜனை  கண்டித்தும் மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.இதனால் அதிமுக அலுவலகத்தில்   பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்